1 கோடி பெறுமதியான இந்திய மீன்பிடி படகுகளை அரசுடமை ஆக்கி ஊா்காவற்றுறை நீதிமன்றம் அதிரடி..

ஆசிரியர் - Editor I
1 கோடி பெறுமதியான இந்திய மீன்பிடி படகுகளை அரசுடமை ஆக்கி ஊா்காவற்றுறை நீதிமன்றம் அதிரடி..

கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 12ம் திகதி வரை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையால் 

பறிமுதல் செய்யப்பட்ட இராமேஸ்வரம்,நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த ஆறு மீன்பிடி படகுகளுக்கான வழக்கு இன்று ஊர்காவற்த்துறை நீதிமன்ற நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில்  விசாரனைக்கு வந்தது. 

அப்போது  படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகத காரணத்தால் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக நிதிபதி உத்திரவிட்டார்.

இதனிடையே இன்று நடைபெற்ற  தங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரத்தை பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு படகுகளுக்கான  விசாரணையில் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரான படகு உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்வதற்க்காக வழக்கின் தீர்ப்பை வரும் 14ம் திகதி ஒத்திவைத்து உத்திரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு