பொன்னாலையில் கற்றாழை கள்ளர்கள் மடக்கி பிடிப்பு..

ஆசிரியர் - Editor I
பொன்னாலையில் கற்றாழை கள்ளர்கள் மடக்கி பிடிப்பு..

அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

வவுனியாவில் வசிக்கும் நால்வரும் அராலியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. 

பொன்னாலையில் தொடர்ந்து கற்றாளைகள் பிடுங்கிச் செல்லப்படும் நிலையில், ஏற்கனவே சில தரப்பினர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

கடந்த வாரம் வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அராலி வட்டார உறுப்பினர் எஸ்.இலங்கேஸ்வரன் 

ஆகியோர் பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரி உதவியுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நால்வரை மடக்கிப் பிடித்து கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர். 

இந்நிலையில், இன்றைய தினம் மேற்படி இரு பெண்கள் உட்பட ஐவர் கற்றாளைகளைப் பிடுங்கியபோது அதை அவதானித்த ச.இலங்கேஸ்வரன், 

பு.கிருஸ்ணவதன், செ.றதீஸ்வரன் ஆகியோர் வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் மேற்படி நபர்களுடன் இணைந்து இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் பிடுங்கிய கற்றாளைகளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு