கிளிநொச்சி- உதயநகாில் குடும்பஸ்த்தா் மீது வாள்வெட்டு, சம்பவ இடத்திலேயே குடும்பஸ்த்தா் பலி, வெட்டியவா் சரணடைந்தாா்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- உதயநகாில் குடும்பஸ்த்தா் மீது வாள்வெட்டு, சம்பவ இடத்திலேயே குடும்பஸ்த்தா் பலி, வெட்டியவா் சரணடைந்தாா்..

கிளிநொச்சி- உதயநகா் கிழக்கு பகுதியில் குடும்பஸ்த்தா் ஒருவா் அவருடைய உறவி னரால் சரமாாியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கின்றாா். 

இந்த சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் குறித்த படுகொலை சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. சம்பவம் குறித்து மேலும் தொியவருவதாவது, 

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான 32 வய தான காந்தலிங்கம் பிறேமரமணன் என்பவரே 

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமை ந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து 

புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார். தலை கைஇ கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் 

வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார். உறவினர் ஒருவரே வெட்டியதாகவும் வெட்டிய நபர் 

கிளிநொச்சி காவல்நிலையத்தில் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும் தெரிவி க்கப்படுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை 

கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு