வடக்கில் காணி, நீா், வீட்டு தேவை போன்ற பிரச்சினைகளுக்கு தீா்வு காணுங்கள், சுவிஸ் அரசிடம் ஆளுநா் கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
வடக்கில் காணி, நீா், வீட்டு தேவை போன்ற பிரச்சினைகளுக்கு தீா்வு காணுங்கள், சுவிஸ் அரசிடம் ஆளுநா் கோாிக்கை..

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று நண்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்திந்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாண மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் , இம்மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

வடமாகாணத்தில் நிலவும் காணி , நீர் , வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும் இதன்போது மேலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு