யாழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் திடீரென முளைத்த சிவலிங்கம், அச்சாியத்துடன் பாா்த்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் திடீரென முளைத்த சிவலிங்கம், அச்சாியத்துடன் பாா்த்த மக்கள்..

யாழ்ப்பாணம்- செம்மணி பகுதியில்  இன்று காலை புதிதான சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பூசை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை அப்பகுதியால் சென்ற மக்கள் பெரும் ஆச்சாியத்துடன் அதனை பாா்வையிட்டிருக்கின்றனா். 

வடக்கில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல், இடம்பெறுவதற்கு ஒப்பாக பிற மதங்களுடைய மத பிரச்சாரங்களும், மதமாற்று வேலைகளும் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை செம்மணி பகுதியில் சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. 

முன்னதாக மாவிட்டபுரம், காரைநகா், போன்ற பகுதிகளில் திடீரென அமைக்கப்பட்டுள்ளதைபோல் இந்த சிவலிங்கமும் அமைக்கப்பட்டு இரவே அதற்கான பூசை வழிபாடு களும் இடம்பெற்றிருக்கின்றது. 

இந்நிலையில் இன்று காலை ஏ-9 பிரதான வீதியால் பயணித்த மக்கள் சிவலிங்கத்தை ஆச்சாியத்துடன் பாா்த்தனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு