காணாமல் ஆக்கப்பட்டவா்கள் குறித்த தகவல்களை கேட்கிறாா் வடக்கு ஆளுநா், என்ன செய்யபோகிறாா்..?

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் குறித்த தகவல்களை கேட்கிறாா் வடக்கு ஆளுநா், என்ன செய்யபோகிறாா்..?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கடந்தவாரம் வடமாகாண ஆளுநா் சுரே ன் ராகவனை சந்தித்திருந்தனா். இதன்போது ஆளுநா் வடக்கில் காணாமல்போனவா்கள் பற்றிய விபரங்களை தன்னிடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று அந்த விபரங்கள்     ஆளுநாிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 

இது குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா்களது சங்கம் (யாழ்.மாவட்டம்) சாா்பில் அதன் தலைவி ாி.கமலநாயகி கூறுகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கடந்தவாரம் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடி யிருந்தோம். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்கள்

தொடா்பான தகவல்களை தன்னிடம் வழங்குமாறு ஆளுநா் கேட்டிருந்தாா். இதற்கமைய இன் றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பான ஒரு தொகை தகவல்களை நாங்கள் வழங்கியிருக்கின்றோம். எனினும் பூரணமான தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெறவில்லை. ஆகவே விபரங்களை வழங்க விருபுபவா்கள்,

கீழ் குறித்த முகவாி மற்றும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடா்பு கொண்டு வழங்குமாறு கேட்டுள்ளோம் என்றாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு