யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புபட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா், நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புபட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா், நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு..

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடையவா் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழரசு கட்சியின் உறுப்பினா் உள்ளடங்கலாக 5 நபா்களை பிணையில் விடுதலை செய்ய மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்து 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று  அடாவடியில் ஈடுபட்டது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று 

வீட்டின் படலையில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அங்கு யன்னல் கண்ணாடிகள் உள்பட பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடுப்பட்டுவிட்டுத் தப்பிதத்து.

அந்தக் கும்பல் தப்பித்தவேளையில் வீதியில் விபத்து ஒன்றும் இடம்பெற்றது. அதிலிருந்து 8 பேரும் தப்பி ஓடினர்.

ஒருவாரமாக சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனர். அதனடிப்படையில் 

வலி. தெற்கு பிரதேச சபையின் தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர் அன்ரன் லீனஸ் உள்பட  5  பேர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் 5 பேரும் உடுவில் மல்வத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இன்று மாலை மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

"வன்முறைச் சம்பவத்துக்கு திட்டமிடல் - ஒழுங்கமைத்தல் என பின்னணியில் இருந்த பிரதான சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினர். அவரது பின்னணியில் 7 பேர் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் மூவர் தேடப்படுகின்றனர்" என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி,  சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு