நடு வீதியில் ஆணும் பெண்ணும் சண்டை, எச்சரித்து பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம்.

ஆசிரியர் - Editor I
நடு வீதியில் ஆணும் பெண்ணும் சண்டை, எச்சரித்து பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம்.

யாழ்.முத்திரை சந்தியில் நடு வீதியில் நின்று தலை கவசங்களால் அடித்து சண்டையிட்ட குடும்பஸ்த்தர் ஒருவரையும், பெண் ஒருவரையும் நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்துள்ளது.

நல்லூர் கிட்டுப்பூங்காவுக்கு அண்மையாக பிரதான வீதியில் நேற்றுமுன்தினம்  இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

 வீதியில் நின்று இருவரும் தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்டுள்ளனர். சுமார் 30 -35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இருவருமே இவ்வாறு சண்டையிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர். அதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இருவரையும் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்தார். அத்துடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இருவரினமும் தனிப்பட்ட விடயம் கருதி சம்பவத்தின் காரணத்தை இந்தச் செய்தியில் வெளிப்படுத்தவில்லை

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு