ஆாிய கூத்தாடினாலும், காாியத்தில் கண்ணாக இருக்கிறது கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
ஆாிய கூத்தாடினாலும், காாியத்தில் கண்ணாக இருக்கிறது கூட்டமைப்பு..

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் இலங்கை தொடா்பில் வெளியிட்டிருக்கும் மிக காட்டமான அறிக்கையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன், சா்வதே சத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். என எச்சாிக்கையினையு ம் விடுத்திருக்கின்றது. 

இது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பி ன் தலைவருமான இரா.சம்மந்தன் மேலும் கூறுகையில், 

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் இலங்கை தொடர்­பில் வெளி­யிட்­ டுள்ள காட்­ட­மான அறிக்­கையை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­கின்­ றது. ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கும் 

பன்­னாட்­ டுச் சமூ­கத்­துக்­கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­கும் இலங்கை அர­சுக்கு இறு­திச் சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது. இனி­யா­வது அரசு ஐ.நா. தீர்­ மா­னத்­தின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். 

வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டும். அதே­வேளை, பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கண்­கா­ணிப்­புக்­கான காலத்தை நீடித்து ஜெனி­வா­வில் இம்­முறை நிறை­வே­ற­வுள்ள புதிய தீர்­மா­னத்­துக்­கும் அரசு இணை அனு­ச­ரணை வழங்கி 

அத­னை­யும் செயற்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டும். இவ்­வாறு எச்­ச­ரிக்­ கை­யு­டன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் திரு­கோ­ ண­மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன்.

இலங்கை தொடர்­பில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் மிச்லே பச்­செ­லெட் கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்கை தொடர்­பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறினாா். 

ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­க­ளைச் செயற்­ப­டுத்த இலங்கை அரசு ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­களை மட்­டும் எடுத்­தது. அதில் முன்­னேற்­றங்­கள் எது­வும் காணப்­ப­ட­வில் லை. பல பரிந்­து­ரை­கள் இன்­ன­மும் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 

இதை ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் கடு­மை­யா­கக் கண்­டித்­துள்­ளார். இலங்­கைக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என­வும் அவர் எச்­ச­ ரிக்கை விடுத்­துள்­ளார்.

நீதி­யைக் கோரி நிற்­கும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் நலன் கருதி ஐ.நா. மனித உரி­மை­ கள் ஆணை­யா­ளர் எடுக்­கும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் நாம் முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வோம்.

அதே­வேளை, இலங்கை அர­சுக்­கும் எச்­ச­ரிக்­கை­யு­டன் ஒன்­றைக்­கூ­றி­வைக்க விரும்­பு­ கின்­றோம். அதா­வது, கிடைத்­துள்ள இறு­திச் சந்­தர்ப்­பத்­தைத் தவ­ற­வி­டாது இனி­யா­ வது அரசு செய்ய வேண்­டி­யதை செய்­யட்­டும். 

இல்­லை­யேல் பார­தூ­ர­மான பின்­வி­ளை­வு­களை அரசு சந்­திக்க வேண்டி வரும் – என்­ றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு