மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை ஆட்டையைபோட்டவா்களுக்கு நடந்த கதி..

ஆசிரியர் - Editor I
மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை ஆட்டையைபோட்டவா்களுக்கு நடந்த கதி..

வலி,வடக்கு குட்டியப்புலம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடிக் கொண் டு சென்ற இருவரை அச்சுவேலி பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

ஏழாலை பகுதியினைச் சேர்ந்தவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆட்டின் உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர்கள் இருவரும் திருடிய ஆட்டினை முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே 

அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

என்றும் பொலிஸார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு