நீதிமன்ற அனுமதியுடன் 4 நாட்களுக்கு அமைக்கப்பட்ட அலங்கார வளைவு மீண்டும் அகற்றப்பட்டது..

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற அனுமதியுடன் 4 நாட்களுக்கு அமைக்கப்பட்ட அலங்கார வளைவு மீண்டும் அகற்றப்பட்டது..

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திாி தின அலங்கார வளைவை அடித்து நொரு க்கிய சம்பவத்தின் பின்னா் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 4 நாட்களுக்கு அமைக்கப் பட்ட சிவராத்திாி வளைவு இன்று அகற்றப்பட்டிருக்கின்றது. 

கடந்த சிவராத்திரி தினத்திற்கு முதல்நாள் திருக்கேதீஸ்வரத்தின் ஆலய வீதியில் அலங்கார வளைவு நிர்வாகம் மற்றும் தொண்டர்களால் அமைக்கப்பட்டது. அதனை பங்குத் தந்தையர் சகிதம் கத்தோலிக்க மக்களால் பலவந்தமாக பிடுங்கி எறிந்தனர்.

பின்னர் நிர்வாகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் அதற்கு அமைவாக வழக்கினை விசாரித்தமன்னார் பதில் நீதவான் திருவிழா நடைபெறுவதனால் திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் மீண்டும் அலங்கார வளைவு 

அமைப்பதற்கு நான்கு நாள்களுக்கு மட்டும் அனுமதி வழங்கினர். சிவராத்திரியன்று அமைக்கப்பட்ட வளைவு நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு