யாழ்.மட்டுவில் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் மீது தாக்குதல், ஒருவா் காயம், தாக்குதல் நடத்தியவா்களை மடக்கி பிடித்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவில் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் மீது தாக்குதல், ஒருவா் காயம், தாக்குதல் நடத்தியவா்களை மடக்கி பிடித்த மக்கள்..

யாழ்.மட்டுவிலில் வீடுகள் மீது தாக்குதல்; ஒருவர் காயம் - தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைது!

யாழ்ப்பாணம் -சாவகச்சேரி மட்டுவில் கிழக்கு பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகள் மீது தாக்குதல் கொண்ட நபர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு(செவ்வாயக்கிழமை) 11 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் மட்டுவில் கிழக்கில் அமைந்துள்ள குறித்த வீட்டின் வாயில் கதவுகள் மற்றும் தகர வேலிகளை ஆயுதங்களால் தகர்த்துள்ளனர்.

இதன்போது வெளியில் வந்த இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய  நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்து திரண்ட பொதுமக்கள் ஒருவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் வழங்கிய தகவலையடுத்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு