தையிட்டி போராட்ட களத்தில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்ட களத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் , அவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.