வவுனியாவில் யாரை ஆதரிப்பது என தமிழ் மக்கள் கூட்டணி கூடி ஆராய்வு

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.
தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அதன் போது, பிரதேச சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பிலும், தவிசாளர் தேர்வின் போது யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலும் கட்சியை வவுனியா மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வது தொடர்பிலும் மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது