வீட்டுக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை கழுத்தறுத்து கொலை செய்த மர்மநபர்கள்!!

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை கழுத்தறுத்து கொலை செய்த மர்மநபர்கள்!!

உறக்கத்தில் இருந்த இளைஞனை அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். 

இச்சம்பவம் நேற்று (07) பிற்பகல் 2.20 மணியளவில் களுத்துறை பலதொட்ட வீதி, தேக்கவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 27 வயதுடைய இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். 

அனுருத்த தனஞ்சய டி சில்வா எனப்படும் சந்துன் என்று அழைக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு