திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor III
திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா!!

அண்மையில் நடந்த பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கு கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாம்.

கொரோனா வைரஸ் காரணமாக வழக்கமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் தெலுங்கு நடிகர் நிதினின் திருமணம் ஐதராபாத்தில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்த திருமண விழாவில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இந்நிலையில், நிதினின் திருமணத்தில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாம். இதனால் நிதின்-சாலினி தம்பதியினர் உள்பட அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்களாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு