உயிரிழந்தவர்களுக்காக பிராத்திக்கின்றேன்!! -ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்-

ஆசிரியர் - Editor III
உயிரிழந்தவர்களுக்காக பிராத்திக்கின்றேன்!! -ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்-

கேரள் மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முன்னணி இசையமைபாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். 

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த விபத்து குறித்த இரங்கல் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். இதுவும் கடந்து போகும்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு