தமிழா்கள் கோபிக்க வேண்டாம்..! இலங்கை சிங்களவா்களுக்கு சொந்தமான நாடு..

ஆசிரியர் - Editor I
தமிழா்கள் கோபிக்க வேண்டாம்..! இலங்கை சிங்களவா்களுக்கு சொந்தமான நாடு..

இலங்கை சிங்களவா்களுக்கு உாிய நாடு, நாங்கள் கள்ளதோணிகள் அல்ல. நாமே நாட்டைக் கட்டியெழுப்பியிருந்தோம். இதனால் தமிழா்கள் கோபிக்ககூடாது. என ஞானசார தேரா் கூறியிருக்கின்றாா். 

இவ்­வாறு கண்­டி­யில் நேற்று நடை­பெற்ற பொது­ப­ல­சேனா அமைப்­பின் மாநாட்­டில் அதன் பொதுச் செய­லா­ளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இன்று எமது வீட்­டுக்­குள் விஷப்­பாம்பு வந்­து­விட்­டது. வீட்­டுக்­குள் இருக்­கும் பாம்பை நாங்­கள் வெளி­யேற்ற வேண்­டும். வீட்­டுக்­குள் எல்­லோ­ரும் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்­டும். இஸ்­லா­ மிய அடிப்­ப­டை­வா­தத்­தால் இவ்­வ­ரு­டம் இது­வரை எட்­டா­யி­ரம் பேர் 

வரை உல­கில் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். அப்­ப­டி­யான அடிப்­ப­டை­வா­தம் இது.
சிங்­கள அரசை அமைப்­போம். சிங்­க­ள­வர்­கள் விரும்­பும் அரசை ஏற்­ப­டுத்­து­வோம். நாடா­ளு­மன்­ றத்­தில் சிங்­க­ள­வர்­கள் கோலோச்­சும் நிலையை ஏற்­ப­டுத்­து­வோம். 

சிங்­க­ள­வர்­கள் முது­கெ­லும்­பு­டன் இருக்க வேண்­டும். நாடா­ளு­மன்­றத்­தில் இருக்­கும் 225 பேரில் குற்­றம் செய்­யா­த­வர்­க­ளைக் காண முடி­யாது. இனத்­துக்­குத் தலைமை வழங்­கக் கூடிய ஒரு அர­சி­ யல் கலப்­பற்ற தலை­வன் எமக்கு வேண்­டும். 

ஜன­நா­ய­கத்­தின் காப்­ப­ர­ணான நாடா­ளு­மன்­றத்­தில் செயற்­ப­டும் ஒரு­வர் – சிங்­க­ள­வ­ரின் நாடா­ ளு­மன்­றம் இன்று தேவை. சிங்­க­ள­வ­ருக்கு ஏற்ற சட்­டங்­கள் தேவை. நமக்­கான நாடா­ளு­மன்­றம் வேண்­டும்.

காவி­க­ளின் பலத்­து­டன் நாம் இந்த நாட்டை வெற்­றியை நோக்­கிக் கொண்டு செல்­ல­லாம். நாட்­டில் 10 ஆயி­ரம் விகா­ரை­கள் உள்­ளன. 7 ஆயி­ரம் விகா­ரை­களை நாம் ஒன்று சேர்த்­தால், பிரி­வி­னை­ களை மறந்­தால் நாம் எதிர்­பார்க்­கும் வாக்­கு­கள் கிடைக்­கும். 

நாங்­கள் கல்வி பயின்று அனு­ப­வத்­து­டன்­தான் வந்­துள்­ளோம். எங்­க­ளால் இந்த நாட்டை நல்ல இடத்­திற்­குக் கொண்டு செல்­ல­லாம். 70 வரு­டம் இந்த நாட்டை வீணாக்­கி­ய­வர்­கள் வீட்­டுக்­குச் செல்ல வேண்­டும். ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வது எமது நோக்­க­மல்ல. 

ஆனால், ஆட்­சி­யா­ளர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் அதி­கா­ரம் எமக்கு இருக்க வேண்­டும். இன்று சிங்­க­ ள­வர்­களை சிங்­க­ள­வர்­க­ளாக இருக்­க­வைக்க எமக்கு அர­சி­யல் அதி­கா­ரம் வேண்­டும். அதற்­காக  நாம் பாடு­பட வேண்­டும்’ – என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு