30 வருடங்களின் பின் அச்சுவேலி- மூளாய் சிற்றுாா்தி சேவை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
30 வருடங்களின் பின் அச்சுவேலி- மூளாய் சிற்றுாா்தி சேவை ஆரம்பம்..

யாழ்.அச்சுவேலி- மூளாய் இடையிலான சிற்றுாா்தி சேவை 30 வருடங்களின் பின்னா் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் 30 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த சேவை இன்று காலை 9 மணிக்கு சம்பிரதாய பூா்வமாக ஆரம்பமானது. 

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு சேவையை ஆரம்பித்துவைத்தாா். இதன்போது அச்சுவேலி- மூளாய் வீதி திறக்கப்படாமை தொடா்பாக மக்கள் சுட்டிக்காட்டியிருந்ததுடன், 

30 வருடங்களின் பின்னா் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் மிக நீண்டதுாரம் பயணம் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினாிடம் கூறியுள்ளனா். இதன்போது கருத்து தொிவித்த டக்ளஸ் தேவானந்தா, 

புதிய அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்ததாகக் கூறுபவர்கள் தற்போது தேர்தல் வரும் போது அரசாங்கம் ஏமாற்றிவிட்டது.என கூற முற்பட்டிருக்கின்றனர். 

கடந்த காலங்களில் மக்கள் தலைவர்களைத் தெரிவு செய்து எவ்வாறான எவ்வாறான ஏமாற்றங்களை பெற்றுக்கொண்டனர் என்பதை உணர்ந்து எதிர்வரும் தேர்தலில் சரியான தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ஙறார், 

நான் ஒருபோதும் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என கூறப்போவதில்லை எனக்கு மக்கள் ஆணை கிடைத்தால் நான் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை தீர்த்து வைப்பேன் என்றார். 

 இப்பகுதி மக்களுக்கு ஒரு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் 30 வருடங்களின் பின்னர் அச்சுவேலி, மூளாய்கு இடையிலான சிற்றூர்தி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு