வடமாகாண ஆளுநாின் பொதுமக்கள் சந்திப்பு கிளிநொச்சியில், காணி பிணக்குகளுடன் அதிகளவான மக்கள்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநாின் பொதுமக்கள் சந்திப்பு கிளிநொச்சியில், காணி பிணக்குகளுடன் அதிகளவான மக்கள்..

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனின் பொதுமக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சி மாவட் டச் செயலகத்தில் இடம்பெற்றது. 

மாவட்டங்கள் தோறும் பொது மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தி வரும் வடக்கு மாகாண ஆ ளுநர் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் பொது மக்கள் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். 

இதன் போது பல பொது மக்கள் கலந்து கொண்டு தங்களின் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 

இதில் அதிகளவான காணிப் பிணக்குகள் காணப்பட்டன. அதிலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிப் பிணக்குகள் அதிகம் காணப்பட்டன.

இதன் போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி,சுகாதாரம், விவசாயம், 

மகளீர் விவகாரம், உள்ளுராட்சி, அமைச்சின் செயலாளர்கள் வடக்கு மாகாண காணி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு