அரச காணிக்கு கள்ள உறுதி முடித்து மணல் அகழ முயற்சி, அரசியல் கட்சி ஒன்றின் முக்கிஸ்த்தரை அடித்து துரத்திய வடமராட்சி கிழக்கு மக்கள்..

ஆசிரியர் - Editor I
அரச காணிக்கு கள்ள உறுதி முடித்து மணல் அகழ முயற்சி, அரசியல் கட்சி ஒன்றின் முக்கிஸ்த்தரை அடித்து துரத்திய வடமராட்சி கிழக்கு மக்கள்..

வடமராட்சி கிழக்கு குடத்தனை- பொற்பதி பகுதியில் அரச காணிக்கு போலி உறுதி முடித்து மணல் அகழ்வுக்கு முயற்சித்தவா்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து துரத்தியடித்துள்ளனா். 

இந்த நிலை­யில் முன்­னாள் அமைச்­சர் ஒரு­வர் இந்த விட­யத்­தில் தலை­யிட்டு அவர்­களை விடு­வித்­துள்­ளார். இந்­ தச் சம்­ப­வம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

வெளிப்­ப­டுத்­தல் உறுதி மூலம் 10 ஏக்­கர் நிலத்தை பொற்­ப­திப் பிர­தே­சத்­தில் ஒரு­வர் உரிமை கோரி­யுள்­ளார். அந்த உறுதி பதி­வுக்­காக பதி­வா­ளர் திணைக்­க­ளத்­துக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­போது, 

வட­ம­ராட்சி கிழக்­குப் பிர­தேச செய­ல­கத்­துக்கு விவ­ரங்­கள் கோரி அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தேச செய­ ல­கம் அது அரச காணி என்று பதில் வழங்­கி­யுள்­ளது.

இருப்­பி­னும் அந்­தப் பகு­தி­யில் மணல் அகழ்­வுக்­கான முயற்சி கடந்­த­வா­ரம் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலை­யில், பிர­ தேச மக்­கள் தடுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

வெளிப்­ப­டுத்­தல் உறு­தியை முடிக்க முயன்ற நபர், வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யில் ஆதிக்­கம் செலுத்­திய முன்­ னாள் அமைச்­ச­ரின் அர­சி­யல் கட்­சி­யைச் சேர்ந்­தோ­ரின் உத­வி­யு­டன் நேற்­றுச் சனிக்­கி­ழமை 

அங்கு சென்­றுள்­ளார். காணி­யில் அள­வீட்­டுப் பணி­களை ஜி.பி.எஸ். கரு­வி­யின் உத­வி­யு­டன் முன்­னெ­டுத்­துள்­ள­ னர். மக்­க­ளுக்கு இந்­தத் தக­வல் கிடைக்­கப் பெற்­ற­தும், 

அந்­தப் பகு­தி­யில் திரண்­ட­னர். காணி அள­வீட்­டுப் பணி­யில் ஈடு­பட்­ட­வர்­களை, அவர்­க­ளின் அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்­தக் கோரி­யுள்­ள­னர். 

தாங்­கள் அதி­கா­ரி­கள் என்று கூறி­ய­போ­தும், அடை­யாள அட்­டை­யையோ ஆவ­ணங்­க­ளையோ காண்­பிக்­க­ வில்லை. சந்­தே­க­ம­டைந்த மக்­கள் அவர்­க­ளின் அள­வீட்­டுக் கரு­வி­க­ளைப் பிடுங்கி எறிந்­துள்­ள­னர்.

 அவர்­களை மடக்­கிப் பிடிக்க முற்­பட்­ட­போது அதி­கா­ரி­கள் என்று கூறி­யோர் ஓட்­டம் பிடித்­துள்­ள­னர். அர­சி­யல் கட்­சி­யைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளும் தப்­பிச் சென்­றுள்­ள­னர். 

இருப்­பி­னும் மக்­க­ளால் இரு­வர் மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் தொடர்­பில் கிராம அலு­வ­ல­ருக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது.

கிராம அலு­வ­ல­ரும் சம்­பவ இடத்­துக்கு வருகை தந்­த­தாக மக்­கள் தெரி­வித்­த­னர். இதன்­போது முன்­னாள் அமைச்­சர் அலை­பேசி ஊடாக தொடர்பு கொண்டு, ம

க்­கள் பிடித்து வைத்­துள்ள இரு­வ­ரை­யும் விடு­விக்­கு­மாறு கூறி­யுள்­ளார். இதன் பின்­னர் அங்கு திரண்­டி­ருந்த மக்­க­ளு­ட­னும் அலை­பே­சி­யில் உரை­யா­டி­யுள்­ளார்.

மக்­க­ளால் பிடிக்­கப்­பட்ட இரு­வ­ரும் பின்­னர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­ற­மையை  அரச அதி­கா­ரி­கள் உத­ய­னுக்க உறு­திப்­ப­டுத்­தி­ய­போ­தும், 

தமது பெயர் விவ­ரங்­களை அவர் வெளி­யிட விரும்­ப­ வில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு