காணாமல்போயிருந்த வயோதிப பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு..

ஆசிரியர் - Editor I
காணாமல்போயிருந்த வயோதிப பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு..


கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த களையாவோடை புலோலி கிழக்கைச் சேர்ந்த  விசாலாட்சி சோமஸ்கந்தன் 80 வயது என்ற வயோதிபப் பெண்மணியே கடந்த  20 ஆம்  திகதி காணாமல்ப் போயுள்ளார்.  இது தொட‌ர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த  நிலையில் இன்று மாதனை , பருத்தித்துறை என்னும் முகவரியில் உள்ள கைவிடப்பட்டிருந்த வீடொண்றில் இருந்து அயலவர்கள், அழுகி உருக்குலைந்த  போன நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது  காணாமல் போயிருந்த களையாவோடை புலோலி கிழக்கு பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதான விசாலாட்சி சோமஸ்கந்தன் எனத் தெரியவந்தது.  

சடலம் மீட்க்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் சந்தேகம் இருப்பதால்  பருத்தித்துறைப் பொஸார் விசாரணைகளை மேற்கொ ண்டு வருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு