வல்வெட்டித்துறை நகரசபையின் பொறுப்பற்ற செயற்பாடு, நகரசபையை முற்றுகையிட மக்கள் தீா்மானம்..

ஆசிரியர் - Editor I
வல்வெட்டித்துறை நகரசபையின் பொறுப்பற்ற செயற்பாடு, நகரசபையை முற்றுகையிட மக்கள் தீா்மானம்..

யாழ்.வல்வெட்டித்துறை நகரசபையின் பொறுப்பற்ற செயற்பாட்டினை கண்டித்து போராட்டம் நடாத்துவதற்கு தொண்டமனாறு கிராம மக்கள் தீா்மானித்துள்ளனா். 

தொண்­டை­மா­னாறு கரும்­பா­வெ­ளி­யில் வல்­வெட்­டித்­துறை நக­ர­ச­பை­யி­னர் குப்பை கொட்­டு­கின்­ற­னர். அத­னா ல் வரும் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள முடி­யாத நிலை­யில் போரா­டும் முடி­வுக்­குத் தள்­ளப்­பட்­டோம் 

என்று அங்­குள்ள பாதிக்­கப்­பட்ட மக்­கள் தெரி­வித்­த­னர். அங்கு பல மாதங்­க­ளா­கக் குப்பை கொட்­டப்­ப­டு­கின்­ றது. அவை தீவைக்­கப்­பட்டு எரி­யூட்­டப்­ப­டு­வ­தால் குடி­யி­ருப்­பு­க­ளுக்­குள் 

புகை சூழ்ந்து சிர­மங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. அங்­கி­ருந்து குப்­பை­களை அகற்­று­மாறு கோரி மக்­கள் வல்­வெட்­ டித்­துறை நக­ர­சபை, உள்­ளூ­ராட்­சித் திணைக்­க­ளம் மற்­றும் 

சுற்­றுச் சூழ­லு­டன் தொடர்­பு­பட்ட திணைக்­க­ளங்­க­ளுக்­கும் கடி­தங்­களை அனுப்­பி­யி­ருந்­த­னர்.

மாற்று ஏற்­பாடு
மக்­க­ளு­டைய கோரிக்­கைக்கு செவி­சாய்த்த அதி­கா­ரி­கள், வல்­வெட்­டித்­துறை முள்­ளிப் பகு­தி­யில் திண்­மக்­க­ழி­ வ­கற்­றல் நிலை­யம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

பின்­னர் குப்­பை­கள் இங்­கி­ருந்து அகற்­றப்­ப­டும் என்று உத்­த­ர­வா­தம் வழங்­கி­யி­ருந்­த­னர். குப்பை கொட்­டு­வ­ தற்கு ஏற்ற இட­வ­ச­தி­கள் நகர சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் இல்­லா­த­தால் அங்கு குப்­பை­கள்

கொட்­டப்­ப­டு­கின்ற என்று நக­ர­ச­பை­யி­னர் தெரி­வித்­தி­ருந்­த­னர். குப்பை கொட்­டுங்­கள் ஆனால் எரி­யூட்­டா­தீர்­ கள் என்ற கோரிக்­கையை மக்­கள் முன்­வைத்­தி ­ருந்­த­னர்.

தொடர்­கி­றது தீ வைப்பு

மக்­க­ளு­டைய வேண்­டு­கோளை மீறி தீ வைக்­கப்­ப­டு­வது தொடர்­கின்­றது. நகர சபையோ தாங்­கள் தீ வைக்­க­ வில்லை என்று கூறு­கின்­றது. 

குப்பை எரி­கின்­ற­போது அணைக்க நகர சபையே வரும். இந்த நிலை தொடர்­கி­றது. பிளாஸ்­ரிக் கழி­வு­கள், பொலித்­தீன் கழி­வு­கள் அனைத்­தும் எரிக்­கின்­றன.

மக்­கள் கடும் விசனம்

தீயால் எழும் புகை காற்­றின் திசை­க­ளுக்கு ஏற்­ற­வாறு குடி­யி­ருப்­புக்­க­ளுக்­குள் செல்­கின்­றது. கடு­மை­யான துர்­நாற்­றம் வீசு­கி­றது. மக்­கள் கடும் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர்.

இலை­யான்­கள் தொல்லை, சுகா­தா­ரச் சீர்­கேடு, சிறு­வர்­க­ளுக்கு நோய்­தொற்­றும் அபா­யம் என்று மக்­கள் குறை­களை அடுக்­கிக் கொண்டே செல்­கின்­ற­னர். நக­ர­ச­ச­பை­யி­னரே தீவைத்து 

விட்டு எமக்கு மறுப்­புக் கூறு­கின்­ற­னர்.

மூலி­கை­கள் நாசம்

தீ அந்­தப் பகு­தி­யில் உள்ள 50க்கும் மேற்­பட்ட வகை­யான மூலி­கைச் செடி­கள் அழிந்துள்­ளன என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழகப் பேரா­சி­ரி­யர் புஸ்­ப­ரட்­ணம் உட்­பட்ட ஆய்­வா­ளர்­க­ளால் மேற்­கொண்ட ஆய்­வு­க­ளின்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

நன்­னீர் ஏரி­யில் குப்பை

குப்­பை­களை நாய்­கள், காகங்­கள் இழுத்­துச் சென்று நன்­னீர் ஏரி­க­ளில் விடு­கின்றன. பொலித்­தீன் பைகள் காற்­ றில் பறந்து நன்­னீர் ஏரி­யில் விழு­கின்­றன. 

நன்­னீர் ஏரி மாசு­ப­டு­கி­றது. நிலத்­தடி நீரைப் பாது­காக்க நீரைச் சேமிக்க அமைக்­கப்­பட்ட நன்­னீர் ஏரி தற்­போது மாச­டைந்­துள்­ளது.

வெளி­நாட்­டுப் பறை­வகள் இந்த நன்­னீர் ஏரிக்கு விரும்பி வரு­கின்­றன. இந்த நீரை அருந்தி அவை இறக்­கும் நிலை காணப்­ப­டு­கி­றது.

போராட முடிவு
இந்த நிலை­யி­லேயே சலிப்­ப­டைந்த மக்­கள் நக­ர­ச­பையை எதிர்த்­துப் போராட முடிவு செய்­துள்­ள­னர். குப்­பை­ களை அங்­கி­ருந்து அகற்­றும் வகை­யில் போராட்­டம் அமை­ய­வுள்­ளது என்று மக்­கள் தெரி­வித்­த­னர். 

நக­ர­ச­பை­யின் சிறப்பு அமர்வு ஒன்­றின் போது குறித்த பகு­தி­யில் பாது­காப்பு அலு­வ­லர் ஒரு­வரைக் கட­மை­யில் அமர்த்தி குப்பை கொட்­டும் முறை­க­ளைக் கண்­கா­ணிக்­கத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

னி­னும் நடை­றைக்கு வர­வில்லை.

தவி­சா­ளர் பதில்
குப்­பை­க­ளைத் தரம் பிரித்தே எடுக்­கின்­றோம். நக­ர­ச­பைக்­குட்­பட்ட குப்­பை­களை 20 லோட், 30 லோட் என்று வெளி­யி­டங்­க­ளுக்கு அனுப்­பு­கி­றோம். 

கடந்த ஒரிரு மாதங்­க­ளா­கவே இவ்­வாறு அதி­க­மாக எரி­யூட்­டப்­ப­டு­கி­றது. நக­ர­சபை தீவைக்­க­வில்லை. மக்­க­ளு­ டைய குற்­றச்­சாட்டை ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது. 

அந்­தப் பகு­தி­யைக் கண்­கா­ணிக்­கின்­றோம். நாளை(இன்று) தொடக்­கம் காவ­லாளி ஒரு­வர் அங்கு அமர்த்­தப்­ பட்டு குப்­பை­க­ளைக் கண்­கா­ணிப்­பார் என்று நக­ர­ச­பை­யின் தவி­சா­ளர் கோ. கரு­னா­னந்­த­ராசா தெரி­வித்­தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு