பாடசாலை வாசலில் குப்பைகளை கொட்டி தீ மூட்டும் இராணுவத்தினாின் காவாலித்தனம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை வாசலில் குப்பைகளை கொட்டி தீ மூட்டும் இராணுவத்தினாின் காவாலித்தனம்..

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள இராணுவத்தினா் பாடசாலை வாயிலில் கழிவுகளை  கொட்டி தீ மூட்டுவதால் பாடசாலை மாணவா்கள் பல்வேறு அசௌகாியங்களை எதிா்கொள்வதாக மாணவா் கள் மற்றும் பெற்றோா் சுட்டிக்காட்டியிருக்கின்றனா். 

இந்நிலையில்  நேற்று (22.03.19) பாடசாலைக்கு பெற்றோர் சென்றிருந்த சமயம் நச்சுமருந்து கலந்த வித்தியா சமான காற்றை சுவாசித்தது போன்ற உணர்வு காணப்பட்டதாக பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். 

பாடசாலை சூழலை மாசுபடுத்தும் வகையில் படையினர் முகாம் அமைத்துள்ள பகுதியில் அண்மை நாட்களாக துர்நாற்றம் வீசுகின்றமை தொடர்பில் தானும் உணர்ந்துள்ளதாகவும், பல பெற்றோர், மாணவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் பெற்றோரிடம் தெரிவித்த பாடசாலை முதல்வர், 

இவ்விடயம் தொடர்பில் மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.யுத்தம் நிறைவின் பின்னர் பாடசாலை காணி மற்றும் விளையாட்டு மைதான காணிகளில் முகாம் அமைத்துள்ள படையினர் கடந்த ஆண்டளவில் ஒருபகுதி காணியை விடுவித்தனர். 

விடுவிக்கப்பட்ட காணியில் தரம் 4,5 வகுப்புக்கள் நடார்த்தப்பட்டு வருகின்றது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் குறித்த பாடசாலைக்கான இட நெருக்கடி காணப்படும் நிலையில் படை முகாமை அகற்றி பாடசாலையின் இட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்வேறு வகையிலும் 

கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் படையினரின் இவ்வாறான செயற்பாடு தொடர்பில் பாடசாலை சமூகமும், பெற்றோரும் விசனம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு 

தரமான பாடசாலை சூழலை ஏற்படுத்தி தருமாறும், படையினர் வசமுள்ள பாடசாலை காணியை விடுவித்து பௌதீக வள பற்றாக்குறைகளை சீர் செய்து தருமாறும் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு