யாழ்.குடாநாட்டில் போதைப் பொருள் விற்பனை செய்யும் இடங்களை அறிந்தும் நடவடிக்கை எடுக்காத பொலிஸாா், நீதிமன்றில் அழுது புலம்பும் அவலம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் போதைப் பொருள் விற்பனை செய்யும் இடங்களை அறிந்தும் நடவடிக்கை எடுக்காத பொலிஸாா், நீதிமன்றில் அழுது புலம்பும் அவலம்..

யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்தை அண்டிய பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை போன்றன இடம்பெற்றுக் கொண்டிருப்ப தாக கோப்பாய் பொலிஸாா் யாழ்.நீதிவான் நீதிமன்றில் கூறியுள்ளனா். 

கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டா ர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறிலில் வைக்கப்பட்ட சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போதே பொலிஸார் இந்த தகவலை மன்றில் தெரிவித்தனர்.

“கொக்குவில் ரயில் நிலையம் – யாழ்ப்பாண பல்கலைக்கழக பின்புறம் அடங்கலான பகுதி யாழ்ப்பாணம் மற் றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் அடங்குகின்றன. அந்தப் பகுதியில்தான் ஹெரோயின், கஞ்சா போதைப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. 

அங்கு சட்டவிரோத மதுபானமும் விற்பனை செய்யப்படுகிறது. கோப்பாய் பொலிஸாரின் ஒற்றர் ஒருவர் அங்கு உள்ள ஒருவரிடம் ஹெரோயின் வாங்குவதற்காக அனுப்பப்பட்டார். அவர் கேட்ட ஹெரோயின் போதைப் பொரு ளுடன் வந்த சந்தேகநபர், அதனை தண்டவாளத்தில் கல்லுக்கு கீழ் வைத்துவிட்டு 

பணத்துக்காகக் காத்திருந்த போது சந்தேகநபரை பொலிஸார் பிடிக்க முற்பட்டனர். அவர் தப்பி ஓடினார். எனி னும் துரத்திச் சென்று பொலிஸார் கைது செய்தனர்” என்று கோப்பாய் பொலிஸார் மன்றுரைத்தனர். வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான், 

சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு