சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் போட்டி போட்டு ஓடிய பஸ் மின்கம்பத்தில் மோதி ஒருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம்- சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை இரு பேருந்துகள் போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்டபோது, தனியார் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பேருந்துக்குள் அகப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.