தலையில் கல் விழுந்து 11 வயதான சிறுவன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
தலையில் கல் விழுந்து 11 வயதான சிறுவன் உயிரிழப்பு..

கேகாலை நூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேஹாகே பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் தலையில் கல் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நூரிய பொலிஸார் தெரிவித்தனர்.

கித்துல்கல பல்லேஹாகே பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்தின் போது, உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டின் மேல் பகுதியில் உள்ள மலைப்பாதையை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். 

இதன்போது, வீட்டிற்கு அருகில் இருந்த சிறுவனின் தலையில் கல் வீழ்ந்துள்ள நிலையில் காயமடைந்த சிறுவன் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நுரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு