யாழில். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான, கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.