SuperTopAds

வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு

ஆசிரியர் - Editor II
வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

காட்டு விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய வழிகள் ஊடாக முல்லைத்தீவு தீர்த்தக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் பாரம்பரிய வழிகள் ஊடாக காட்டுவிநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.

தொடர்ந்து எதிர்வரும் 08ஆம் திகதி காட்டுவிநாயகர் ஆலய பொங்கல் இடம்பெற்று மறுநாள் 09ஆம் திகதி திங்கட்கிழமை வைகாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.