தமிழரசு கட்சியின் நியமன குழு மீண்டும் கூடியது..

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சியின் நியமன குழு மீண்டும் கூடியது..

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்றும் (6) கூடியது.

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக நேற்றைய தினம் (5) கூட்டம் இடம்பெற்றபோதும் இறுதி தீர்மானம் எட்டப்படாத நிலையில் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு