யாழ்.வடமராட்சி கிழக்கு விபத்தில் காயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு விபத்தில் காயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு..

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியை சேர்ந்த கடற்புலிகளின் முன்னாள் போராளியான புரட்சி என அழைக்கப்படும் , 

நடேசு பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடந்த 04ஆம் திகதி இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில்,

படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு