உணவகத்திற்குள் புகுந்து சண்டித்தனம், பொலிஸ் உத்தியோகஸ்த்தர் இடமாற்றப்பட்டு விசாரணை..

ஆசிரியர் - Editor I
உணவகத்திற்குள் புகுந்து சண்டித்தனம், பொலிஸ் உத்தியோகஸ்த்தர் இடமாற்றப்பட்டு விசாரணை..

நுவரெலியா நகரில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரையும் ஊழியரையும் தாக்கி கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தற்காலிகமாக கண்டி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட உதவி பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் உணவகத்தின் உரிமையாளர் நேற்று வெள்ளிக்கிழமை (04) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் , உணவகத்தில் உள்ள சிசிரிவி கமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு