SuperTopAds

முல்லைத்தீவில் குளத்தில் தாமரை இலை பறிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
முல்லைத்தீவில் குளத்தில் தாமரை இலை பறிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் உள்ள ஆலயத்திற்காக தாமரை இலை பறிப்பதற்காக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாமரை குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.

 அளம்பில் வடக்கை சேர்ந்த இராஜசேகர் நிசாந்தன் (வயது 25) மற்றும் சிவநேசன் பிரணவன் (வயது 10) ஆகிய இருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இவர்களின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.