பொன்னாலை கடலுக்குள் பாய்ந்த ஹயஸ் ரக வாகனம்!

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்திற்கு அருகில் ஹயஸ் ரக வாகனம் ஒன்று கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளது.
காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது.
இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது.
வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்துள்ளார். சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
.