தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி யாழில்.போராட்டம்

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
தொடர்ந்து இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் சார்பாக ஆறு பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி மகஜரை கையளித்தனர்