SuperTopAds

கல்முனையில் 'கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் ' முன்னெடுப்பு

ஆசிரியர் - Editor III
கல்முனையில் 'கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் ' முன்னெடுப்பு

கல்முனையில்  'கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் ' முன்னெடுப்பு

பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல்  (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 - ஜூன் 5 வரை கல்முனை பதில் பிரதேச செயலாளர்  சட்டத்தரணி ரி.எம்.எம்.  அன்சார்   ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

'கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் ' எனும் தொனிப் கல்முனை  கடற்கரை பிரிவுகளில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (5) காலை  7  மணி முதல் இடம்பெற்றது.

இதன்போது  பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரை கரையோர   பிரதேசங்கள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.

மேலும் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில்     சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மர நடுகை இடம்பெற்றது.நிகழ்வில் பாடசாலை  அதிபர் எம்.ஏ.சலாம்   மற்றும்  பிரதி அதிபர் உதவி அதிபர்கள் ஆகியோரின் பங்கேற்புடன்  ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.