வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியாயில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
காத்தார்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் (வயது 24) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டார்.
தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் காணபப்டுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது அடுத்து , சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று பார்வையிட்ட போது, சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ளமையால், கொலையாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தீவிசை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.