முல்லைத்தீவில் ஆலய கேணியில் தவறி விழுந்து இரு மாணவிகள் உயிரிழப்பு

முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படம் எடுக்க சென்ற பாடசாலை மாணவிகள் கேணிக்குள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற பதினைந்து வயதுடைய ச.ரஸ்மிலா மற்றும் ர.கிருசிகா ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.