சைக்கிள் சங்குடனும் பேச்சு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆகியோருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனும் கலந்து கொண்டார் .
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பிலையே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.