அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்து விசமிகள்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு கோழிகளுக்கு விஷமிகள் விஷம் வைத்தலால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் , பல கோழிகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
வளலாய் மேற்கு பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று , தமது வாழ்வாதாரத்திற்காக கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோழி கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிகளுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை விஷமிகள் விஷம் வைத்துள்ளனர். அதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளன.
தமது வாழ்வாதாரத்திற்காக வளர்த்த கோழிகளை விஷம் வைத்து கொன்றமையால் , தாம் வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து நிர்க்கதியாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.