யாழ் . பொது நூலகம் முன் பொதுச் சுடர் ஏற்றிய சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்த் தேசிய பேரவையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பொது நூலகத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில், பொதுச் சுடரினை எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றிவைத்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பேரவை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்