இலங்கை அரசுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் இறுதி எச்சாிக்கை இதுதான்..

ஆசிரியர் - Editor I
இலங்கை அரசுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் இறுதி எச்சாிக்கை இதுதான்..

வௌநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு பொறிமுறை ஒன்றை அமைக்க தவறினால் சா்வதேச குற்ற வியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லும் நிா்ப்பந்தத்திற்குள் நாம் தள்ளப்படுவோம். என நாடாளு மன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் எச்சாித்துள்ளாா். 

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுக்கான உறுப்பு நாடுகளின் கூட்டங்களில் பங்கேற்றப்பதற்கு ஜெனிவா சென்றிருந்து அவர் நாடு திரும்பிய நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவா தத்தில் உரையாற்றினார்.

தன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த தாவது: “இலங்கையின் நீதிச் செயல்முறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பண ஜெனிவாவில் உரையாற்றியமை ஏமாற்றம் அளிக்கிறது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொள்ள இணங்கி, 3 தீர்மானங்களிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை 

அமைப்பதை இலங்கை அரசியலமைப்பு தடை செய்யவில்லை. நாட்டின் நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, 2015இல் நீதி அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ச, இணங்கியிருந் தார்.  அவரது இணக்கத்தின் அடிப்படையில்தான்,  

30/1 தீர்மானத்தில் கையெடுத்திடப்பட்டது.2013ஆம் ஆண்டு முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த விஜேதாச ராஜபக்ச, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் இணைத்துக் கொள்ள கோரும் 

தனிநபர் பிரேரரணையை சமர்ப்பித்திருந்தார். தமிழ் மக்கள் முற்றிலும் வெளிநாட்டு நீதிப் பொறிமுறையைதான் கேட்கிறார்கள்.அரசு, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் சர்வதேச வாக்குறுதியை தொடர்ந்தும் மீறினால், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை 

அல்லது ஏனைய வெளிநாட்டு நீதிப் பொறிமுறையை நாடும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுவார்கள் – எ ன்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு