தாகம் தீா்க்க மென்பானம் வாங்கியவருக்கு காத்திருந்த அதிா்ச்சி, சளிபோன்ற திரவத்துடன் தலைமுடி..

ஆசிரியர் - Editor I
தாகம் தீா்க்க மென்பானம் வாங்கியவருக்கு காத்திருந்த அதிா்ச்சி, சளிபோன்ற திரவத்துடன் தலைமுடி..

யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியில் மென்பானம் வாங்கிய பல்கலைக்கழக மாணவா் ஒருவா் குறித்த மென்பானத்திற்குள் சளிபோன்ற திரவத்துடன், தலைமுடியை ஒத்த பொருள் இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். 

சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, 

இன்று (22)மதியம் உணவருந்திய பின் அந்த மாணவன் யாழ்ப்பாணம் புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு செய்துள்ளார்.

அத்துடன் அம்மென்பானத்தை குடிப்பதற்கு முற்பட்ட வேளை சுவைமாறுபட்டிருந்ததை உணர்ந்துள்ளார்.

இதனால் மென்பானத்தின் மேல் உறையை அவ்விடத்தில் இருந்து அகற்றிய வேளை உள்ளே சளி போன்ற திரவத்துடன் தலைமுடியை ஒத்த பொருள் காணப்பட்டுள்ளது.

எனினும் இவ்விடயத்தை கடை உரிமையாளரிடம் குறிப்பிட்டும் கூட எந்தவொரு திருப்தியான பதிலை தரவில்லை என குற்றஞ்சாட்டினார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு