வடக்கிலிருந்து பெருமளவு வைத்தியா்களை தெற்கிற்கு கொண்டு செல்ல சதி..! தமிழ் அதிகாாிகளே உடந்தையாம்.

ஆசிரியர் - Editor I
வடக்கிலிருந்து பெருமளவு வைத்தியா்களை தெற்கிற்கு கொண்டு செல்ல சதி..! தமிழ் அதிகாாிகளே உடந்தையாம்.

யாழ்மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை நிலவும் நிலை யில் தொடர்ச்சியாக 3 ஆவது வைத்தியரை யாழ்மாவட்டத்தை விட்டு வெளியேற்ற முயன்றுள்ளது. 

நெடுந்தீவு மருதங்கேணி போன்ற வைத்தியசாலைகக்கு வைத்தியர்கள் இல்லாத நிலையிலும் தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் 

வைத்தியர் சங்கம் யாழ்.மக்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறது. வைத் தியர் உமாசுதனை வெளியேற்ற முயன்று தோல்வியுற்ற சங்கம் குருநகர் வைத்திய சாலை பெண் வைத்தியரை கொழும்புக்கு அனுப்ப முற்பட்டு 

தேல்வியை தழுவியது.தற்போது வரணி வைத்தியசாலையில் திறம்பட செயற்பட்ட வைத்தியரை கொழும்புக்கு அனுப்பி தனது விசுவாசத்தினை காட்டியுள்ளது. வைத்தி யர் சங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் வைத்தியர் செந்தூரன் 

தனது மனைவி தான் பதிலீடாக வர வேண்டிய நிலையில் தனது தனியார் வைத்தியசா லை வருமானத்திற்காக தொடர்ந்தும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி கதிரையினை பிடித்து வைத்துள்ளார். 

மேலதிக பெண் சுகாதார வைத்திய அதிகாரி உள்ள நிலையில் பதிலீடின்றி  இவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படக் கூடிய நிலையிலும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு