விடுதலை புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்களை இலக்குவைத்து பாாிய தேடுதல் வேட்டை, கரடியே காறி துப்பிய மூமன்ட்..

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்களை இலக்குவைத்து பாாிய தேடுதல் வேட்டை, கரடியே காறி துப்பிய மூமன்ட்..

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டு பெருமெடுப்பில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை தேடிய பொலிஸாா் வழக்கம்போல் இறுதியில் ஒன்றையுமே எடுக்கவில்லையாம். 

இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங் கள் எதுவும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விடுதலைப் புலிக ளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிக்கு இன்று முற்பகல் சென்ற பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தனியார் வீடு ஒன்றை முற்றுகையிட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந் தனர். 

எனினும் இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட சில பொதுமக்களின் உடமைகள் மற்றும் யுத்த தடயப்பொருட்கள் சிலவற்றை மட்டும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணி தற்பொழுது நிறைவிற்கு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு