ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கிறாா் மாவை..! வலி,வடக்கு மக்களின் எச்சாிக்கை செய்தியையும் கொண்டு செல்கிறாா்.

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கிறாா் மாவை..! வலி,வடக்கு மக்களின் எச்சாிக்கை செய்தியையும் கொண்டு செல்கிறாா்.

காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தால் இயக்கப்படும் தல்செவன விடுதியை சுவீகாிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத் திாிபால சிறிசேனாவுடன் பேச்சு நடத்தப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். 

இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்த ஜனாதிபதியை  அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வலி.வடக்கு காங்கேசன்துறை “தலசெவன இராணுவ விடுதியை” மையமாகக் கொண்டு அவ் விடுதியைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவ நிர்வாகத்தினது சுற்றுலாப் பயன்பாட்டிற்காக  எடுத்துள்ள சுவீகரிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர், காணியமைச்சுடன் பேச்சு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு