ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்தவருக்கு நீதிமன்றம் கொடுத்த தீா்ப்பு..

ஆசிரியர் - Editor I
ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்தவருக்கு நீதிமன்றம் கொடுத்த தீா்ப்பு..

ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவா ளியாக அடையாளம் காணப்பட்டவருக்கு 2 மாதங்கள் சிறைத் தண்டணை மற்றும் 10 தண்டம் விதித்து யாழ்.நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திாி சைலவன் தீா்ப்பளித் துள்ளாா். 

அத்துடன், குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை செலுத்தவேண்டு என்று உத்தரவிட்ட நீதிமன்று, அதனை செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனை யை அனுபவிக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் 

விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இந்த நிலையில் அவரது வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனையடுத்து நீதிமன்று தண்டனைத் தீர்ப்பை வழங்கியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு