வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.30  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று காலை ஏழாலை, மல்லாகம் ஒரு பகுதி, கட்டுவன் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் 

கிளிநொச்சி பிரதேசத்தில்:

கற்சிலைமடு, மன்னன் கண்டல், வித்தியாபுரம், தட்டையார்மலை, முத்துவிநாயகர்புரம், முத்தையன்கட்டு, கனகரட்ணபுரம் ஆகிய இடங்களிலும் 

மன்னார் பிரதேசத்தில்: 

பறயனாலங்குளத்திலிருந்து உயிலங்குளம்வரை முருங்கனிலிருந்து சிலாவத்துறை வரை, முருங்கன்பிட்டியிலிருந்து நறுவிலிக்குளம்வரை, ஆண்டாங்குளத்திலிருந்து பள்ளிவாசல்பிட்டிவரை, ஆண்டாங்குளத்திலிருந்து பாப்பாமோட்டைவரை, நானாட்டான், வங்காலை கடற்படைமுகாம், வங்காலை நீர்ப்பாசனசபை, அடம்பன் நீர்ப்பாசனசபை, செம்மண்தீவு நீர்ப்பாசனசபை, முள்ளிக்குளம், செம்மண்தீவு Ware House, டொன் பொஸ்கோ, சிலாவத்துறை கடற்படை முகாம், முள்ளிக்குளம் கடற்படைமுகாம், முருங்கன் விதைகள் உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.    

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு