யாழ்.மாநகரசபை உறுப்பினாின் முன்மாதிாியான செயற்பாடு. எங்கள் பாா்வை உங்கள் பக்கமும் வரும்.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை உறுப்பினாின் முன்மாதிாியான செயற்பாடு. எங்கள் பாா்வை உங்கள் பக்கமும் வரும்.

யாழ்.மாநகரசபை தொடா்பில் பொதுமக்கள் மத்தியில் விமா்சனங்கள் இருந்து வரும் நிலையில், அந்த விமா்சனங்கள் ஒட்டுமொத்த மாநகரசபை உறுப்பினா்களுக்கும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கின்றது. 

காரணம் ஒரு சில மாநகரசபை உறுப்பினா்கள் தமது இயலளவுக்கும் மேல் சென்று மக்களுக்கான பணிகளை தொடா்ந்தும் முன்னெடுத்து வருகின்றனா். அவ்வாறானவா்கள் தொடா்பான பாா்வை மற்றும் விமா்சனங்கள், 

அரசியல் விருப்புக்கள், கட்சிபேதங்கள் கடந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டியவை என யாழ்.வலயம் ஊடகம் நினைக்கிறது. அந்த வகையில் யாழ்.மாநக ரசபை உறுப்பினரான ந.லோகதயான் குறித்த பாா்வை, இங்கு தரப்படுகிறது. 

2018ம் ஆண்டு மாா்ச் 26ம் திகதி யாழ்.மாநகரசபை உத்தியோக பூா்வமாக ஆட்சியமைக்கப்பட்டது. யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள 3ம் வட்டார உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். 

கடந்த ஒரு ஆண்டில் யாழ்.மாநகரசபைக்கு கிடைத்த சபை நிதியில் அமைக்கப்பட்ட 2 வீதிகளுக்கு அப்பால் சொந்த முயற்சியினால் சபைக்கு தேடி கொடுத்த நிதியின் மூலம் நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருந்த 5 வீதிகளை புனரமைத்துள்ளாா். 

சில அரசியல்வாதிகள்போல் அல்லாமல் பூரணமான தாா் வீதிகளாக புனரமைப்பு செய்துள்ளாா். இவ்வாறு மாநகரசபைக்கு வெளியிலிருந்து நிதி மூலங்களை எவரும் கொண்டு வந்தது கிடையாது என்பது இன்னும் விசேட அம்சம். 

இதுவரை 4 முக்கியமான தீா்மானங்களை இவா் சபையில் கொண்டுவந்து அதனை நிறைவேற்றியதற்கு அப்பால் அதனை நடைமுறைப்படுத்த தொடா்ச்சியாக முயன்று வருகின்றாா். 

அவையாவன ஆாியகுளம் புனரமைப்பு, யாழ்.பிரதான நுலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தறவான நினைவுக்கல் அகற்றல், மாநகரசபையில் இடம்பெற்ற தவறான நிதி கையாளுகை, உள்ளிட்ட 4 தீா்மானங்களை கொண்டுவந்துள்ளாா். 

மேலும் யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கான கொடுப்பனவில் 90 வீதமானதை பொதுப்பணிக்காக பயன்படுத்துகின்றாா். மேலும் தனது வட்டாரத்திற்குள் உள்ள மண் வீதிகளை தாா் வீதிகளாக மாற்றுவது தனது இலக்கு என கூறுகிறாா். 

இவற்றுக்கும் அப்பால் போாினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவா்கள் சிலருக்கும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கும் உதவிகளை செய்து வருகின்றாா். 

இவ்வாறான மாநகரசபை உறுப்பினா்களை அதிகம் பாராட்டலாம் தவறில்லை..


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு