கிளிநொச்சி- காப்புறுதி முகாமையாளா் வெட்டிக் கொலை, 3 பெட்டிகளில் வந்த பணம் எங்கே? மேலும் சில ஆதாரங்கள் சிக்கின..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- காப்புறுதி முகாமையாளா் வெட்டிக் கொலை, 3 பெட்டிகளில் வந்த பணம் எங்கே? மேலும் சில ஆதாரங்கள் சிக்கின..

கிளிநொச்சி- உதயநகா் பகுதியில் காப்புறுதி நிறுவத்தின் முகாமையாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபா் பஹாின் நாட்டிலிருந்து வரும்போது அந்த நாட்டு பணத்தை 3 பெட்டிகளில் எடுத்து வந்துள்ளதாக பொலிஸாா் கூறுகின்றனா். 

கிளிநொச்சி உதயநகரில் கடந்த 5ஆம் திகதி காலை காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்ய ப்பட்டார்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்று குறிப்பிட்டு  அந்த நபரை வெட்டியுள்ளார். சம்பவத்தையடுத்து கொலை செய்தார் என்று தேடப்பட்ட சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்குத் திரும்பும்வேளை 

விமான நிலையப் பொலிஸாரால் கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு கைது செய்யப்பட்டா ர். சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துவந்த பொலிஸார்,  கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேகநபரை மேலும் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் 

நீதிமன்றில் அனுமதி கேட்டனர். நீதிமன்று அனுமதித்தது. அதனடிப்படையில் இரண்டு நாள்கள் தடுத்துவைத்து சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், அவரது அலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் ஒவ்வொன்றாக ஆராயப்ப ட்டன.

அவரது அலைபேசியிலிருந்து பெறப்பட்ட ஒளிப்படம் ஒன்றில் முன்று பெட்டிகளில் பெருமளவு றியால் பணக்கட்டுகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அந்தப் பணத்தை தான் இலங்கைக்கு எடுத்து வந்ததாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் அந்தப் பணத்தை என்ன செய்தார் என்பது அவரால் குறிப்பிடப்படவில் லை. சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது நண்பரான ஆசிரியர் ஒருவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர். “யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் தொழில்நிமிர்த்தம் வசித்து வருகின்றேன். 

சந்தேகநபர் எனக்கு நெருக்கமானவர். அவர் கடந்த 3ஆம் திகதி காலை  யாழ்ப்பா ணம் பேருந்து நிலையத்துக்கு வந்து இறங்கியவுடன் தன்னை எனது வீட்டுக்கு அழை த்துச் செல்லுமாறு எனக்கு அழைப்பை எடுத்தார். அதனால் நான் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்குச் சென்று அவரை ஏற்றிவந்து எனது வீட்டில் தங்கவைத்தேன். 

மறுநாளான 4ஆம் திகதி தான் கிளிநொச்சியிலுள்ள எனது தாயாரின் வீட்டுக்கு செல்லவேண்டும், அங்கு தங்கி நின்றுகொண்டு எனது மனைவியுடன் பிறேமரமணனுக்கு தொடர்புள்ளமையை அறியவேண்டும் எனச் சந்தேகநபர் சொன்னார். 

எனது தாயாரின் வீடு சந்தேகநபரின் வீட்டுக்கு அண்மையாக ஒரே தெருவில் உள்ளது. எனது மோட்டார் சைக்கிளையும் தருமாறு கோரினார். நான் மோட்டார் சைக்கிளை வழங்கினேன். 4ஆம் திகதி எனது அம்மா வீட்டுக்குச் சென்று பயணப்பைகளை வைத்துவிட்டு, 

தான் புதுக்குடியிருப்புக்குச் செல்லப்போகின்றேன் என்று கூறிவிட்டு அவர் சென்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு